PM Kisan : பிஎம் கிசான் திட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை தனித்துவ அடையாள எண் பெறாத 10 ஆயிரம் விவசாயிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல் வெளியாகியுள்ளது.
PM Kisan : பிஎம் கிசான் திட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை தனித்துவ அடையாள எண் பெறாத 10 ஆயிரம் விவசாயிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல் வெளியாகியுள்ளது.10 ஆயிரம் விவசாயிகளுக்கு எச்சரிக்கைBird fluவானிலை அப்டேட்: ஈரோடு, நாமக்கல், வேலூரில் மழையா, வெயிலா? இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
. PM Kisan : பிஎம் கிசான் திட்டத்தில் 22வது தவணைத் தொகை உங்களுக்கு கிடைக்க வேண்டும் என்றால் முக்கிய அறிவுறுத்தல் வெளியாகியுள்ளது. இதுவரை விவசாய தனித்துவ அடையாள எண் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும், அவ்வாறு பெற்றுக்கொள்ளாத விவசாயிகளுக்கு பிஎம் கிசான் 22வது தவணைத் தொகை கிடைகாது என்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். குறிப்பாக, திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 10,000 விவசாயிகள் தங்களின் 22-வது தவணைத் தொகையைப் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. விவசாயிகளுக்கான தனித்துவ அடையாள எண் பெறாத விவசாயிகளுக்கு இந்த மாதம் இறுதியில் வழங்கப்படவுள்ள ரூ. 2,000 நிதியுதவி கிடைக்காது என மாவட்ட ஆட்சியர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.அந்தவகையில் திண்டுக்கல் மாவட்டத்தினருக்கு அம்மாவட்ட ஆட்சியர், முக்கிய அறிவுறுத்தலைக் கொடுத்துள்ளார். அதில், திண்டுக்கல் மாவட்டத்தில் 10 ஆயிரம் விவசாயிகள் பி.எம்.கிஷான் நிதி பெறுவதற்கான தனித்துவ அடையாள எண் பெற வில்லை என கூறியுள்ளார். இந்த விவசாயிகளுக்கு 22வது தவணைத் தொகை கிடைக்காது என அவர் எச்சரித்துள்ளார். மேலும், தனித்துவ அடையாள எண் பெறாத விவசாயிகள் விரைவில் பதிவு செய்து பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும், இதுதொடர்பாக மாவட்ட வேளாண்துறை அலுவலகத்தை நாடுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.நாடு முழுவதும் சொந்தமாக விவசாய நிலம் வைத்துள்ள சிறு, குறு விவசாயிகளின் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் நிதியுதவி பிரதம மந்திரியின் கிசான் நிதி உதவி திட்டத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. பயனாளிகளின் வங்கிக் கணக்குகளின் 4 மாதங்களுக்கு ஒருமுறை 3 சம தவணைகளில் தலா ரூ.2 ஆயிரம் என இந்த நிதி வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. இதில் 22வது தவணைத் தொகை இம்மாதம் இறுதி வாரத்தில் வழங்கப்பட உள்ளது. இதற்கான பயனாளிகளாக உள்ள விவசாயிகளின் விபரங்களை ஆய்வு செய்யும் பணிகள் தற்போது நடந்து வருகின்றன.முக்கியமாக பயனாளிகளுக்கு விவசாய தனித்துவ அடையாள எண்ணுடன் கூடிய பி.எம்.கிஷான் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. தற்போது திட்டப் பயனாளிகளாக உள்ள விவசாயிகள் தங்களது ஆதார் எண் விபரங்களை இணைக்க வேளாண் துறையினர் தொடர்ந்து அறிவுறுத்துகின்றனர். ஆனால் திண்டுக்கல் மாவட்டத்தில் ள கிஷான் கார்டுகள் வழங்கப்பட்ட10 ஆயிரம் விவசாயிகள் ஆதார் எண்களை இணைக்காமல் உள்ளது தெரியவந்துள்ளது.இதனால், பயனாளிகளின் உண்மை தன்மை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, 10 ஆயிரம் விவசாயிகள் வட்டாரங்களில் உள்ள வேளாண் உதவி இயக்குனர் அலுவலங்களில் தங்களது ஒரிஜினல் நில ஆவணங்கள், சிட்டா, ஆதார், ஆதாருடன் இணைக்கப்பட்ட அலைபேசி எண் விபரங்களை வழங்க வேண்டும். அவ்வாறு கொடுக்கப்படும் விவசாயிகளுக்கு விவசாயிகளுக்கான தனித்துவ அடையாள எண் கிடைக்கும். இந்த எண்ணை கட்டாயம் பெற்றால் மட்டுமே பிஎம் கிசான் திட்டத்தில் விவசாயிகள் பயனாளிகளாக இருக்க முடியும். போலி விவசாயிகள் மற்றும் பினாமி பெயரில் விவசாயிகளாக இருப்பவர்களை முழுமையாக அடையாள காணவே மத்திய அரசு இந்த நடைமுறையைக் கட்டாயமாக்கியுள்ளது.ஏற்கனவே பிஎம் கிசான் திட்டத்தில் பயனாளிகளாக இருந்தவர்கள் மற்றும் இத்திட்டத்துக்கு புதிதாக விண்ணப்பித்தவர்கள் எல்லோரும் தங்களின் விண்ணப்ப நிலையை ஆன்லைனிலேயே செக் செய்து கொள்ள முடியும். அது எப்படி? என்பதை இங்கே விரிவாக பார்க்கலாம்.- அல்லது, பிஎம் கிசான் செயலியிலும் இதை செக் செய்யலாம்.- அடுத்து, உங்கள் பதிவு எண்ணை உள்ளிட வேண்டும். - ஏதேனும் காரணத்தால் உங்கள் பதிவு எண் உங்களுக்கு நினைவில் இல்லை என்றால், 'Know Your Registration Number' என்பதைக் கிளிக் செய்து உங்கள் பதிவு எண்ணைக் கண்டறியவும்.- பின்னர் திரையில் கேப்ட்சா குறியீட்டை உள்ளிட வேண்டும்.- பின்னர் உங்கள் விண்ணப்ப ஸ்டேட்டஸைப் பார்த்து, உங்கள் பெயர் பிஎம் கிசான் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை அறிந்து கொள்ளலாம்.மேலும் படிக்க | PM Kisan 22வது தவணை யாருக்கெல்லாம் கிடைக்காது? e KYC செய்து முடிப்பது எப்படி? உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Tirupati“விஜய் முதலமைச்சர் ஆவாரா?” நடிகர் சிவகுமார் அளித்த ‘நச்’ பதில்! என்ன தெரியுமா?12 வருட காத்திருப்பு.. குரு பெயர்ச்சி ஆட்டம்.. இந்த ராசிகளுக்கு மினுமினுக்கும் அதிர்ஷ்டம், பொற்காலம் ஆரம்பம்Family Pensionsenior citizensபிஎம் கிசான் : 10 ஆயிரம் விவசாயிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு - உடனே இதை செய்யவும்Bharath Bandh
PM Kisan 22Nd Installment PM Kisan Farmer ID Dindigul Farmers News பிஎம் கிசான் பிஎம் கிசான் லேட்டஸ்ட் அப்டேட் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு திண்டுக்கல் மாவட்ட செய்திகள் பிஎம் கிசான் விவசாய அடையாள எண் பெறுவது எப்படி விவசாய தனித்துவ அடையாள எண் பெற விண்ணப்பிப்பது எப் PM Kisan Aadhaar Link PM Kisan Status Check 2026 Pmkisan.Gov.In PM Kisan ₹2000 Payment Farmer Unique ID Mandatory
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
ग्रेटर नोएडा में शिवालिक होम्स सोसायटी के खरीदार 10 साल से कर रहे मालिकाना हक का इंतजारग्रेटर नोएडा के शिवालिक होम्स के खरीदार 10 साल से मालिकाना हक का इंतजार कर रहे हैं। बिल्डर पर यूपीसीडा का 1.
Read more »
Pathanamthitta News: പത്തനംതിട്ടയിൽ ജപ്തിക്കെത്തിയ ഉദ്യോഗസ്ഥർക്ക് മുന്നിൽ ആത്മഹത്യാ ഭീഷണി; തലയിലൂടെ പെട്രോളൊഴിച്ച് ഗൃഹനാഥൻ10 ലിറ്ററോളം പെട്രോൾ തലയിലൂടെ ഒഴിച്ച് കൊണ്ടാണ് അനിൽകുമാർ ആത്മഹത്യാ ഭീഷണി മുഴക്കിയത്.
Read more »
बच गया चिली का अटाकामा! 10 बिलियन डॉलर का प्रोजेक्ट रद्द, दुनिया के सबसे साफ आसमान को था खतराबच गया चिली का अटाकामा! 10 बिलियन डॉलर का प्रोजेक्ट रद्द, दुनिया के सबसे साफ आसमान को था खतरा
Read more »
UPI goes stop India’s digital payments BIG UPDATE: দেশজুড়ে আচমকাই স্তব্ধ UPI, কাজ করছে না PhonePe, GPay বা Paytm! কবে, কখন হবে স্বাভাবিক? কী হয়েছে?Tuesday February 10 Indias widely used digital payment network has stopped functioning
Read more »
घोसी चीनी मिल अपने लक्ष्य की ओर अग्रसर, 10.42 लाख कुंतल की पेराई पूरीघोसी चीनी मिल ने अब तक 10.
Read more »
सोने में जोरदार तेजी, 10 ग्राम का भाव 1.57 लाख रुपए के पारसोने में जोरदार तेजी, 10 ग्राम का भाव 1.57 लाख रुपए के पार
Read more »
