India National Cricket Team: துலிப் டிராபியில் ஷமி இடம்பிடிக்காத சூழலில், தற்போது இந்த 3 வேகப்பந்துவீச்சாளர்கள் மீது அதிக கவனம் குவிந்துள்ளது. இவர்கள் முதல்முறையாக இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடிக்க பிரகாசமான வாய்ப்புள்ளது.
India National Cricket Team : துலிப் டிராபி யில் ஷமி இடம்பிடிக்காத சூழலில், தற்போது இந்த 3 வேகப்பந்துவீச்சாளர்கள் மீது அதிக கவனம் குவிந்துள்ளது. இவர்கள் முதல்முறையாக இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடிக்க பிரகாசமான வாய்ப்புள்ளது.
உடற்தகுதியை நிரூபிக்காவிட்டால் சர்வதேச போட்டிகளில் விளையாடுவது கடினம்.8வது ஊதியக்குழு, 44% ஊதிய உயர்வு: நிதிச்செயலரின் ஹிண்ட்.... மகிழ்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள்இன்னும் 12 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி.. மாக அதிர்ஷ்டம், பண அலை, உச்ச ராஜ பொற்காலம் பெறப்போக்கும் ராசிகள் இவையேகுரோதி ஆண்டு வரலட்சுமி விரதம் அபூர்வமாய் வரும் அற்புதமான நாள்! சூரிய பெயர்ச்சி நாளி்ல் நோன்பு!கன்னிக்கு மாறும் சுக்கிரனால் கன்னியரின் கனவு நிறைவேறும்! சுக்கிரப் பெயர்ச்சி நற்பலன்கள்! இந்திய கிரிக்கெட்டில் சிறந்த வேகப்பந்துவீச்சாளர்கள் கிடைப்பது என்பது மிக மிக அரிதாகும். எப்போதும் தரமான சுழற்பந்துவீச்சாளர்கள் வண்டி வண்டியாக கிடைப்பார்கள். லெக் ஸ்பின்னர்கள், ஆப் ஸ்பின்னர்கள் மட்டுமின்றி இடது கை ஸ்பின்னர்கள், மிஸ்ட்ரி ஸ்பின்னர்கள், சைனாமேன் ஸ்பின்னர்கள் என விதவிதமாக கிடைப்பார்கள். அதேநேரத்தில் வேகப்பந்துவீச்சை பார்த்தோமானால் நிலைமை சற்று மோசம்தான். இந்திய அணியில் சர்வதேச தரத்தில் இப்போது இருக்கும் வேகப்பந்துவீச்சாளர்கள் என்றால் ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, சிராஜ் ஆகியோரை மட்டுமே குறிப்பிட முடியும். இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் பெரிதாக இப்போது விளையாடுவதில்லை. சிராஜ் கூட இன்னும் நிறைய போட்டிகள் விளையாட வேண்டியுள்ளது. இதுதான் இந்திய அணியில் வேகப்பந்துவீச்சின் நிலைமை. இடதுகை வேகப்பந்துவீச்சில் அனுபவம் வாய்ந்தவர்கள் என யாருமே இல்லை. அதுவும் டெஸ்ட் தொடரில் இந்திய அணி இடது கை வேகப்பந்துவீச்சாளர்கள் இல்லாமலேயே உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் விளையாடி வருகிறது.அதிலும் இப்போது முகமது ஷமி காயத்தில் சற்று மீண்டு வருகிறார். அவர் இன்னும் முழு உடற்தகுதி பெற்றுவிட்டாரா என்பது தெரியவில்லை. தற்போது பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்று வரும் முகமது ஷமி பந்துவீசுவதை தொடங்கிவிட்டதாகவும், தொடர்ந்து பந்துவீச்சில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவது அவரது உடற்தகுதியை பொறுத்துதான் என செய்தியாளர்கள் சந்திப்பில் கௌதம் கம்பீர் மற்றும் அஜித் அகர்கர் ஆகியோர் தெரிவித்திருந்தனர்.மேலும், காயமடைந்து மீண்டும் சர்வதேச போட்டிகளை இந்திய வீரர்கள் விளையாட வேண்டும் என்றால் உள்ளூர் தொடர்களில் விளையாடி ஃபார்மை நிரூபிக்க வேண்டும் என பிசிசிஐ கடுமையாக தெரிவித்திருக்கிறது. தற்போது ஜடேஜா விளையாடி ஃபார்மை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இப்படியிருக்க இந்த துலிப் டிராபியில் ஷமி தேர்வு செய்யப்படவில்லை. எனவே அவர் வங்கதேசத்திற்கு எதிரான தொடரில் களமிறங்க வாய்ப்பில்லை என்பது உறுதியாகிறது. அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரில் நேரடியாக களமிறங்கலாம் என தெரிகிறது.தற்போது ஷமி விளையாடாத சூழலில் இந்த மூன்று வேகப்பந்துவீச்சாளர்கள் முதல்முறையாக சர்வதேச டெஸ்ட் போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெறுவார்கள் எனலாம். தற்போது இந்த மூன்று வீரர்கள் துலிப் டிராபி தொடரில் விளையாட உள்ளனர். இவர்கள் சிறப்பாக விளையாடும்பட்சத்தில் வங்கதேச அணிக்கு எதிரான தொடரில் 2 பேருக்கு வாய்ப்பு கிடைக்கும் எனலாம். அர்ஷ்தீப் சிங், கலீல் அகமது, ஹர்ஷித் ராணா ஆகியோர்தான் அந்த மூன்று வேகப்பந்துவீச்சாளர்கள் ஆவார். இடதுகை வேகப்பந்துவீச்சாளர்களாக தற்போது அர்ஷ்தீப் சிங் மற்றும் கலீல் அகமது மட்டுமே உள்ளனர். இவர்கள் ரெட் பாலில், அதுவும் புதிய பந்து மற்றும் பழைய பந்தில் தங்களது திறனை எப்படி வெளிப்படுத்திகிறார்கள் என்பதை தேர்வுக்குழு கூர்ந்து நோக்கும். பழைய பந்தை ரிவர்ஸ் செய்வதில் அர்ஷ்தீப் சிங் கைத்தேர்ந்தவர் ஆவார். அதே நேரத்தில் ஹர்ஷித் ராணா சீமை பிடித்து ஷமி போல் வீசுவதில் வல்லவர். இவரிடம் வேகமும் இருக்கும். துலிப் டிராபியில் இவர் தனது திறனை நீருபித்துவிட்டால் டெஸ்ட் அணிக்கான டிக்கெட் கிடைத்துவிடும். மேலும் படிக்க | இந்திய அணிக்கு பலம் சேர்க்கப்போவது இவர்கள் தான்...! துலிப் டிராபியின் முக்கிய வீரர்கள் யார் யார்? உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!ThangalaanSenthil BalajiIndependence Day 2024Mercury transitசிறையில் முதல்வர் கெஜ்ரிவால்... டெல்லியில் தேசிய கொடியை ஏற்றப்போவது யார் தெரியுமா?Isha Foundation
Duleep Trophy 2024 Mohammed Shami Not Playing In Duleep Trophy Duleep Trophy Team India India National Cricket Team India National Cricket Team Latest News Updates Indian Test Team Arshdeep Singh Kaleel Ahmed Harshit Rana NCA National Cricket Academy முகமது ஷமி துலிப் டிராபி 2024 முகமது ஷமி துலிப் டிராபியில் இல்லை துலிப் டிராபி இந்திய அணி இந்திய தேசிய கிரிக்கெட் அணி அர்ஷ்தீப் சிங் கலீல் அகமது ஹர்ஷித் ராணா தேசிய கிரிக்கெட் அகாடமி என்சிஏ ஷமியால் வாழ்க்கை பெறப்போகும் இந்த 3 பாஸ்ட் பௌலர்க
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
ஹர்திக் பாண்டியா கேப்டன் பொறுப்புக்கு சரிபட்டுவரமாட்டார்ஹர்திக் பாண்டியா இந்திய அணியின் கேப்டன் பொறுப்புக்கு சரிபட்டு வரமாட்டார் என குஜராத் டைட்டன்ஸ் அணியின் பயிற்சியாளர் ஆஷிஸ் நெஹ்ரா தெரிவித்துள்ளார்.
Read more »
இந்திய அணியின் முதுகுகில் குத்தும் இந்த ஐபிஎல் அணி - இலங்கை போட்ட மாஸ்ட் பிளான்IND vs SL: 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணியை எதிர்கொள்ளும் விதமாக, இலங்கை அணி ஒரு ஐபிஎல் அணியுடன் கைக்கோர்த்து பயிற்சி மேற்கொண்டது. இதுகுறித்து இதில் விரிவாக காணலாம்.
Read more »
ஹர்திக் பாண்டியா இந்திய அணியில் இருந்து நீக்கப்படலாம் - ரவி சாஸ்திரி எச்சரிக்கைRavi Shastri, Hardik Pandya : ஹர்திக் பாண்டியா இந்திய அணியில் இருந்து முற்றிலும் நீக்கப்படலாம் என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி எச்சரித்து, அதற்கான காரணத்தையும் தெரிவித்துள்ளார்.
Read more »
இனி இந்திய அணியின் ஓப்பனிங்கில் இவர்தான்... கம்பீர் களமிறக்கும் இந்திய சுனில் நரைன்Team India: இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான கௌதம் கம்பீர் இந்திய அணியில் பல்வேறு மாற்றங்களை செய்து வரும் நிலையில், அதில் நடைபெற இருக்கும் முக்கிய மாற்றம் குறித்து இங்கு காணலாம்.
Read more »
இந்திய அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சரியில்லை - ரோகித் சர்மா ஓபன் டாக்Rohit Sharma : இந்திய அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சரியாக ஆடவில்லை என இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா குற்றம்சாட்டியுள்ளார்.
Read more »
துலிப் டிராபி தொடரில் ரோஹித், விராட்... ஆனால் இந்த வீரருக்கு மட்டும் ஓய்வுDuleep Trophy 2024: ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட இந்திய அணியின் (Team India) சீனியர்கள் துலிப் டிராபி தொடரில் விளையாடுவார்கள் என தகவல் கூறப்படும் நிலையில், இந்த வீரருக்கு மட்டும் பிசிசிஐ ஓய்வளித்துள்ளது.
Read more »
