KC Venugopal, Pegasus spyware : பெகாசஸ் மூலம் மீண்டும் காங்கிரஸ் தலைவர்கள் உளவுபார்க்கப்படுவதாக அக்கட்சியின் மூத்த தலைவரான கேசி வேணுகோபால் குற்றம்சாட்டியுள்ளார்.
பெகாசஸ் மூலம் மீண்டும் உளவு பார்க்கிறார் பிரதமர் நரேந்திர மோடி - காங்கிரஸ் தலைவர் பகீர் குற்றச்சாட்டு KC Venugopal, Pegasus spyware : பெகாசஸ் மூலம் மீண்டும் காங்கிரஸ் தலைவர்கள் உளவு பார்க்கப்படுவதாக அக்கட்சியின் மூத்த தலைவரான கேசி வேணுகோபால் குற்றம்சாட்டியுள்ளார்.
மீண்டும் பூதாகரமாகும் பெகாசஸ்8th Pay Commission 8th Pay Commission: DA, TA, HRA, பிற அலவன்சுகளில் அதிரடி ஏற்றம்... மத்திய அரசு ஊழியர்களுக்கு மாஸ் அப்டேட்குருவின் உச்ச ஆட்டம்.. இந்த ராசிகளுக்கு பணம், அதிர்ஷ்டம், ராஜராஜ பொற்காலம் Congress News Tamil : காங்கிரஸ் தலைவர்கள் பெகாசஸ் தொழில்நுட்பம் மூலம் உளவு பார்க்கப்படுவதாக வெளியாகியிருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த ஆதாரத்துடன் ஆழப்புழா எம்பியும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான கேசி வேணுகோபால் குற்றம்சாட்டியுள்ளார். அவர் வைத்திருக்கும் ஐபோன் உளவு பார்க்கப்படுவதாக ஐபோன் நிறுவனம் அனுப்பியிருக்கும் செய்தியை எக்ஸ் தளத்திலும் வெளியிட்டுள்ளார் அவர். இது அப்பட்டமான விதிமீறல் மற்றும் அரசியல் சாசனத்துக்கு எதிரான நடவடிக்கை என்றும் கேசி வேணுகோபால் தெரிவித்துள்ளார். அவர் எக்ஸ் பக்கத்தில் எழுதியிருக்கும் பதிவில்,"உங்களுக்குப் பிடித்த தீங்கிழைக்கும் ஸ்பைவேரை எனது போனுக்கும் அனுப்பியமைக்கு நன்றி பிரதமர் மோடி ஜி. உங்களின் இந்த சிறப்புப் பரிசைப் பற்றி என்னிடம் ஆப்பிள் தெரிவித்துவிட்டது. இதன்மூலம் தெளிவாக தெரிவது என்னவென்றால், பிரதமர் மோடி அரசு கிரிமினல் மற்றும் அரசியலமைப்பிற்கு விரோதமான முறையில் செயல்படுகிறது. அரசியல் எதிரிகளின் பின்னால் சென்று அவர்களின் தனியுரிமையை இந்த முறையில் ஆக்கிரமிக்கிறது." என குற்றம்சாட்டியுள்ளார். மேலும், மக்களவை தேர்தலில் மக்கள் கொடுத்த செய்தி என்னவென்றால், அரசியலமைப்பு மற்றும் பாஜகவின் பாசிச செயல்திட்டங்களை நிராகரிக்கிறோம் என்பது தான் என்றும் கேசி வேணுகோபால் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க | திருமணத்திற்கு புறப்பட்ட மணமகன்... சிறுநீர் கழிக்கச் சென்றபோது மரணம் - பாம்பு கடித்து கொடூரம்!மக்களவை தேர்தல் நடந்து முடிந்த ஒருசில மாதங்களிலேயே பெகாசஸ் உளவு விவகாரம் மீண்டும் தலைதூக்க இருப்பது அரசியல் கட்சிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மக்களவை தேர்தலுக்கு முன்பாக எதிர்க்கட்சிகள் மற்றும் பத்திரிக்கையாளர்களை மத்திய அரசு பெகாசஸ் என்ற ஸ்பைவேர் மூலம் உளவு பார்ப்பதாக செய்தி வெளியானது. இதற்கு எதிராக வழக்கும் தொடரப்பட்டிருக்கும் நிலையில், கேசி வேணுகோபால் வைத்திருக்கும் இந்த குற்றச்சாட்டு அரசியல் களத்தில் இந்த விவாகரம் மீண்டும் பூதாகரமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபோன் நிறுவனம் கேசி வேணுகோபால் மட்டுமின்றி இந்தியா முழுவதும் ஸ்பைவேர் தாக்குதலுக்கு உள்ளாகும் போன்கள் குறித்த விவரங்களை சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எச்சரிக்கை செய்தி அனுப்பியுள்ளது. இதேபோல் உலகம் முழுவதும் சுமார் 150 நாடுகளைச் சேர்ந்த ஐபோன் யூசர்களுக்கும் ஐபோன் இதேபோன்ற செய்தியை அனுப்பியிருக்கிறது. அதாவது ஒவ்வொரு நாட்டிலும் உளவு பார்க்கப்படும் நபர்களுக்கு ஐபோன் நிறுவனம் இந்த எச்சரிக்கை கொடுத்திருக்கிறது. மேலும், ஐபோன் யூசர்களின் தனியுரிமை விவகாரத்தில் நிறுவனம் எந்தவொரு சமரசத்தையும் செய்து கொள்ளாது என்றும் விளக்கமளித்துள்ளது.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!ITR FilingPriya atleeGuruHair fallவிடைபெற்றார் ஆண்டர்சன்... 40,037 பந்துகளில் 704 விக்கெட்டுகள் - சாதனைகளின் லிஸ்ட் இதோ!
Pegasus Spyware Narendra Modi Government Congress Allegations Pegasus Espionage KC Venugopal Iphone Spyware Claim கேசி வேணுகோபால் பெகாசஸ் பிரதமர் நரேந்திர மோடி காங்கிரஸ் குற்றச்சாட்டு உளவு காங்கிரஸ் நியூஸ் இந்தியா நியூஸ் தமிழ் Latest Congress News Rahul Gandhi News
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
பிரதமர் நரேந்திர மோடியின் மாத சம்பளம் மற்றும் செலவுகள் எவ்வளவு தெரியுமா?Narendra Modi’s salary: இந்தியாவில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராகப் பதவியேற்று சாதனை படைத்துள்ளார்.
Read more »
AI விஜயகாந்த்... விஜய்க்கு அப்போ ஓகே சொன்ன பிரேமலதா... இப்போது மறுப்பது ஏன்?AI Vijayakanth: மறைந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் விஜய்காந்தை ஏஐ மூலம் திரைப்படங்களில் பயன்படுத்த இதுவரை யாருக்கும் அனுமதி அளிக்கவில்லை என தேமுதிக அறிவித்துள்ள நிலையில், இதன் பின்னணி குறித்து விரிவாக காணலாம்.
Read more »
’மிசன் குஜராத்’ ஆட்டத்தை இன்றே தொடங்கிய ராகுல் காந்தி...! பிரதமர் மோடியை தோற்கடிப்பேன் என சபதம்Rahul Gandhi, Mission Gujarat : அகமதாபாத் சென்றிருக்கும் ராகுல்காந்தி தொண்டர்களிடம் பேசும்போது, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தலைவர்களை குஜராத்தில் காங்கிரஸ் தோற்கடிக்கும் என தெரிவித்தார்.
Read more »
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கவலையளிக்கிறது - தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செலவப்பெருந்தகை விமர்சனம்Selvaperundhagai, Tamil Nadu Congress Leader : தேசியக்கட்சியின் மாநில தலைவருக்கே பாதுகாப்பு இல்லையென்பதை பார்க்கும்போது தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு கவலையளிக்கிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
Read more »
கூலிப்படையின் தலைநகராக சென்னை மாறி உள்ளது - அண்ணாமலை குற்றச்சாட்டு14 நாட்களில் தமிழகத்தில் 134 கொலைகள் நடைபெற்று உள்ளது. தமிழகம் தற்பொழுது அபாயகரமான சூழலில் உள்ளது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு.
Read more »
7 மாநில இடைத்தேர்தல் வெற்றி.. மோடி சர்வாதிகாரத்திற்கு கிடைத்த சம்மட்டி அடிRahul Gandhi News : நாடு முழுவதும் 7 மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் இந்தியா கூட்டணி கட்சிகள் அமோக வெற்றியை பெற்றிருக்கும் நிலையில், இந்த வெற்றி பிரதமர் நரேந்திர மோடி அரசுக்கு மக்கள் கொடுத்திருக்கும் சம்மட்டி அடி என எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார்.
Read more »
