EPFO : ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் EPFO செய்திருக்கும் சில நடைமுறை மாற்றங்கள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்
EPFO : ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் EPFO செய்திருக்கும் சில நடைமுறை மாற்றங்கள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள் EPFO புதிய விதிகள் 2025: அனைத்து சேவைகளிலும் எளிமை மற்றும் புதுமையை கொண்டு வந்திருக்கும் EPFO லேட்டஸ்ட் அப்டேட்டுகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்2025 ஆம் ஆண்டில் ஊழியர்களுக்கு EPFO ஒரு பெரிய பரிசைக் கொண்டு வந்துள்ளது.
நாடு முழுவதும் 7 கோடிக்கும் மேற்பட்ட செயலில் உள்ள PF உறுப்பினர்களுக்கு நிம்மதியான செய்தியாக, ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அதன் செயல்பாட்டை முழுமையாக டிஜிட்டல் மற்றும் காகிதமற்றதாக மாற்ற 5 முக்கிய மாற்றங்களைச் செயல்படுத்தியுள்ளது. இதனால், மீண்டும் மீண்டும் PF அலுவலகத்திற்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை, விண்ணப்பங்களை நிரப்பும் வேலைகளில் சிக்கிக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. இப்போது பல வசதிகள் ஆன்லைனில் வந்துவிட்டன. அவை என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்...1. புரொபைல் அப்டேட் - இப்போது UAN ஆதாருடன் இணைக்கப்படும்போது, பெயர், பிறந்த தேதி, பாலினம், திருமண நிலை, பெற்றோர் அல்லது மனைவியின் பெயர் போன்ற தகவல்களைப் புதுப்பிக்க ஆவணங்களைப் பதிவேற்ற வேண்டிய அவசியமில்லை. இந்த செயல்முறை முற்றிலும் ஆன்லைனில் மயமாக்கப்பட்டுவிட்டது. 2. நீங்கள் வேலை மாறும்போது PF தானாகவே மாற்றப்படும் -ஜனவரி 15, 2025 முதல், வேலைகளை மாற்றும்போது PF பரிமாற்றத்திற்கு பழைய அல்லது புதிய முதலாளியின் ஒப்புதல் தேவையில்லை. ஊழியர்களுக்கு விரைவான மற்றும் நேரடி பலன்களை வழங்கும் வகையில், பிஎஃப் தானாகவே புதிய கணக்கிற்கு மாற்றப்படும்.3. Joint declaration செயல்முறை முற்றிலும் டிஜிட்டல் மயமாகிவிட்டது -UAN ஏற்கனவே ஆதாருடன் இணைக்கப்பட்டிருந்தால், ஜனவரி 16, 2025 முதல் Joint declaration படிவத்தை இப்போது ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம். இருப்பினும், UAN இல்லாத அல்லது இறந்த உறுப்பினர்களுக்கு physical forms இன்னும் தேவைப்படும். 4. ஓய்வூதிய பலன்களுக்கான அமைப்பு -ஜனவரி 1, 2025 முதல், EPFO மையப்படுத்தப்பட்ட ஓய்வூதிய கட்டண முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இப்போது ஓய்வூதியம் NPCI தளம் மூலம் எந்த வங்கிக் கணக்கிற்கும் நேரடியாக அனுப்பப்படும். PPO இப்போது UAN உடன் இணைக்கப்பட்டுள்ளது, இதனால் digital life certificate சமர்ப்பிப்பது மிகவும் எளிதானது. 5. அதிக ஊதியம் பெறுபவர்களுக்கு ஓய்வூதிய விதிகள் - EPFO வரம்பை விட அதிக சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கும், அந்த அடிப்படையில் ஓய்வூதியம் பெற விரும்புவோருக்கும், கூடுதல் பங்களிப்புக்கான தெளிவான விதி இப்போது செயல்படுத்தப்பட்டுள்ளது. தனியார் அறக்கட்டளைகளை நடத்தும் நிறுவனங்களும் இதே செயல்முறையைப் பின்பற்ற வேண்டும். இது முழு அமைப்பையும் வெளிப்படையானதாகவும் கண்காணிக்கக்கூடியதாகவும் மாற்றியுள்ளது.EPFO - வின் புதிய அடையாளம்: புதியமாக மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள்EPFO வெறும் சேமிப்புத் திட்டம் கொண்டுள்ள அமைப்பு என்பதை தாண்டி, ஒரு ஸ்மார்ட் டிஜிட்டல் தளமாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. இப்போது கோரிக்கை படிவங்களை நிரப்புவதில் எந்தத் தொந்தரவும் இல்லை, அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை, ஒவ்வொரு சேவையும் ஆன்லைனில் ஒரு சில கிளிக்குகளில் கிடைக்கிறது.Ration Card : 15 நாட்களில் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம் ஏற்கப்படுகிறதா? அமைச்சர் சக்கரபாணிக்கு வேண்டுகோள்Venus TransitVishal ex-girlfriends list
EPFO Pension Rules EPFO Digital Changes PF Auto Transfer EPFO புதிய விதிகள் EPFO 2025 அப்டேட் ஓய்வூதியதாரர்களுக்கு EPFO நியூஸ் ஆன்லைன் PF சேவைகள் யுஏஎன் ஆதார் இணைப்பு EPFO ஓய்வூதிய விதிகள் EPFO புதிய மாற்றங்கள் 2025 EPFO Online Services UAN Aadhaar Link Joint Declaration Online Pension Payment Digital EPFO Rules High Salary EPFO Good News Pensioners
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
ரயில்வே, வங்கி தேர்வுகளில் வெற்றி பெற வேண்டுமா? தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்free SSC Railway Bank coaching Tamil Nadu : ரயில்வே மற்றும் வங்கிப் பணிகளுக்கான தேர்வுகளில் வெற்றி பெற முயற்சிப்பவர்களுக்கு தமிழ்நாடு அரசு ஒரு சூப்பரான குட் நியூஸ் வெளியிட்டுள்ளது.
Read more »
படித்த இளைஞர்களுக்கு குட் நியூஸ் : தொழில் தொடங்க ரூ.75 லட்சம் கடன்Tamilnadu Government Business Loan : தமிழ்நாடு அரசின் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் (NEEDS) கீழ் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த படித்த முதல் தலைமுறை தொழில் முனைவோர்கள் மானியத்துடன் கூடிய கடன் பெற விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்துக்கான முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
Read more »
LPG சிலிண்டர் விலை குறைந்தது, மாதத்தின் முதல் நாளே வந்த குட் நியூஸ்: லேட்டஸ்ட் விலை இதோLPG Cylinder Price: 19 கிலோ வணிக எல்பிஜி எரிவாயு சிலிண்டரின் விலை இன்று முதல் ரூ.14.5 குறைக்கப்பட்டுள்ளது. உங்கள் நகரத்தில் எல்பிஜி சிலிண்டரின் புதிய விலை என்ன என்பதை இங்கே காணலாம்.
Read more »
படித்த இளைஞர்களுக்கு மாத உதவித்தொகை - தமிழ்நாடு அரசின் லேட்டஸ்ட் குட் நியூஸ்Tamil Nadu government : தமிழ்நாடு அரசு லேட்டஸ்டாக வெளியிட்டிருக்கும் குட் நியூஸ் என்னவென்றால் படித்த இளைஞர்களுக்கு மாத உதவித் தொகை பெறலாம்.அதற்கு உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
Read more »
EPFO விதிமுறையில் முக்கிய மாற்றம், ஊழியர்களுகான நல்ல செய்தி..!EPFO : ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி விதிமுறையில் மிகப்பெரிய சட்டத்திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இது ஊழியர்களுக்கு மிகப்பெரிய குட்நியூஸ் ஆகும்.
Read more »
EPFO: பிஎப் லேட்டஸ்ட் குட் நியூஸ்! எக்ஸ்சேஞ்ச், பேலன்ஸ் சரிபார்ப்பில் வரும் பெரிய மாற்றம்EPFO : ஈபிஎஃப்ஓ முதல் டிஜிட்டல் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துகிறது. பிஎஃப் பரிமாற்றம் மற்றும் இருப்பு சரிபார்ப்பு மூலம் 7 கோடி உறுப்பினர்கள் பயனடைய உள்ளார்கள்.
Read more »
