Central government : தமிழக விவசாயிகள் மத்திய அரசின் பிஎம் குசும் திட்டத்தில் (PM KUSUM) 40 ஆயிரம் ரூபாய் பெறுவது எப்படி? என்பதை இங்கே பார்க்கலாம்
Central government : தமிழக விவசாயிகள் மத்திய அரசின் பிஎம் குசும் திட்டத்தில் 40 ஆயிரம் ரூபாய் பெறுவது எப்படி? என்பதை இங்கே பார்க்கலாம்மத்திய அரசின் சூப்பர் திட்டம் அப்டேட்பெண்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதியின் பிறந்தநாள் பரிசு! ரூ.
1000 யார் யாருக்கு கிடைக்கும்?பொங்கல் பரிசு: இந்த ஆண்டு தமிழக குடும்பங்களுக்கு எவ்வளவு ரொக்கப் பணம் கிடைக்கும்?Central government : தமிழ்நாட்டு விவசாயிகள் மத்திய அரசின் பிரதம மந்திரி கிசான் உர்ஜா சுரக்ஷா எவம் உத்தன் மகாபியான் திட்டத்தின் கீழ், 40 ஆயிரம் ரூபாய் வரை பெற முடியும். ஆனால், இத்திட்டம் குறித்த விழிப்புணர்வு விவசாயிகள் மத்தியில் பரவலாக இல்லை. இப்போது உத்தரப்பிரதேச மாநில விவசாயிகளுக்கு இத்திட்டத்தில் மிகப்பெரிய சலுகையை மத்திய அரசு அறிவித்திருக்கும் நிலையில், தமிழக விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் என்னென்ன நன்மைகள் பெறலாம்?, பிஎம் குசும் திட்டம் என்றால் என்ன? என்ற விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.பாரத பிரதமரின் மகிழ்ச்சி திட்டம் , அல்லது பிஎம் குசும் திட்டம் என்பது சூரிய ஒளி மின்சக்தி மூலம் ஆண்டுதோறும் ரூ.40,000-வருமானம் ஈட்டும் திட்டம் ஆகும். மத்திய, மாநில அரசால் 60 சதவீத மானியத்துடன் சூரிய ஒளி மின்சாரத்தால் இயங்கும் பம்ப்செட் சோலார் பம்ப் 11 கிலோ வாட் வரை அமைக்கலாம். இத்திட்டத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு மின்வாரியத்தால் வழங்கப்பட்ட இலவச மின் இணைப்பு இருக்க வேண்டும்.1) இத்திட்டத்தில் 60 சத மானியத்தில் சூரிய ஒளி மின்சாரம் வழங்கப்படுகிறது. 2) மின் இணைப்பு எந்த வகையிலும் துண்டிக்கப்படமாட்டாது. இலவச மின்சாரமும் ரத்து செய்யப்படமாட்டாது எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. 3)இத்திட்டத்தில் இலவச மின்சாரத்தைப் பயன்படுத்துவதோடு, சூரிய ஒளி மின்சாரத்தையும் பயன்படுத்துவதால், மின்சாரம் சிக்கனமாகிறது.5) விவசாயிகள் சூரிய ஒளி மின்சாரம் உபயோகப்படுத்தியது போக. மீதமுள்ள சூரிய ஒளி மின்சாரமானது கணக்கிடப்பட்டு, அதனை தமிழ்நாடு அரசு கொள்முதல் செய்து, அதற்கான தொகையானது மாதந்தோறும் கணக்கிடப்பட்டு விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ.40,000- வரை கிடைக்கும். 6) அரசு மானியம் 60 சதவீதம் போக, 40சதவீத தொகையினை விவசாயிகள் பங்குத் தொகையாக செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்த முடியாத பட்சத்தில்இத்திட்டத்துக்கு விவசாயிகள் விண்ணப்பிப்பது எப்படி? இத்திட்டத்தில் பயனடைய விரும்புவோர் விருப்ப விண்ணப்ப படிவம், ஆதார் அட்டை நகல், சிட்டா அடங்கல் நகல் ஆகிய ஆவணங்களை வட்டார வேளாண் விரிவாக்க மையம் அல்லது தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம்.பி.எம். குசும் திட்டம் என்பது மத்திய அரசின் மிகப்பெரிய திட்டங்களில் ஒன்றாகும். இது நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்குப் பெரும் பலனை அளித்து வருகிறது. இத்திட்டம் பொதுவாக மூன்று கூறுகளைக் கொண்டது: A: விவசாய நிலங்களில் 500 கிலோவாட் முதல் 2 மெகாவாட் வரையிலான சிறிய அளவிலான சோலார் மின் உற்பத்தி நிலையங்களை நிறுவி, உள்ளூர் மின் கட்டத்துடன் இணைப்பது. B: தனியாகச் செயல்படும் சூரிய சக்தி நீர்ப்பாசனப் பம்புகளை நிறுவுதல். உத்தரப் பிரதேசத்தில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 40,521 பம்புகள் இந்தக் கூறின் கீழ் வருகின்றன.தமிழ்நாட்டில் பி.எம். குசும் திட்டம் தமிழ்நாட்டிலும் பி.எம். குசும் திட்டம் தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் மற்றும் வேளாண் பொறியியல் துறை ஆகியவை இணைந்து இத்திட்டத்தைக் கண்காணித்து வருகின்றன. தமிழ்நாட்டில் பெரும்பாலும் 70% வரையிலான மானியம் வழங்கப்படுகிறது. இதில் மத்திய அரசு 30% மானியமும், மாநில அரசு 40% கூடுதல் மானியமும் வழங்குகிறது. விண்ணப்ப முறை: தமிழக விவசாயிகள் வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தங்கள் பங்களிப்புத் தொகையைச் செலுத்தி பம்புகளைப் பெறலாம். தமிழ்நாட்டில் தற்போதுள்ள டீசல் பம்புகளுக்குப் பதிலாகச் சோலார் பம்புகளை நிறுவுவதற்கும், மின் இணைப்பு பெற்ற விவசாயப் பம்புகளைச் சோலார் மயமாக்குவதற்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பி.எம். குசும் திட்டமானது, விவசாய நிலங்களில் மின்சாரம், டீசல் பயன்பாட்டைத் தவிர்த்து, நீர்ப்பாசனச் செலவைக் குறைப்பதுடன், விவசாயிகளை ஆற்றல் உற்பத்தியாளர்களாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. எனவே, தமிழ்நாட்டு விவசாயிகள் இத்திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளவும்.மேலும் படிக்க | கிசான் அட்டை பெறுவது எப்படி? ஆடு, மாடு, கோழி வளர்ப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!I am Karthikeyan, a Senior Sub-Editor at Zee Tamil News Channel, bringing 10 years of experience in the media industry. I have extensive experience working in both news television and online website platforms.கௌதம் கம்பீரின் பிடிவாதம் பேராபத்தா? டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர் தோல்விகள்! 16 மோசமான சாதனைகள்!மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு அநீதியா? 8வது ஊதியக்குழு நிபந்தனையால் மூத்த குடிமக்கள் அச்சம்!IPL Mini Auctionமண்ணைக் கவ்விய இந்திய அணி... 25 ஆண்டுகளுக்கு பின் வெறித்தனம் காட்டிய தென்னாப்பிரிக்கா!ரூ.340 சேமித்தால் ரூ.25 லட்சம் கிடைக்கும்… LIC சூப்பர் திட்டம் பற்றி தெரியுமா?
PM KUSUM Tamil Nadu TN Farmer Subsidy Solar Pump Scheme மத்திய அரசு பிஎம் குசும் திட்டம் சோலார் பம்ப் திட்டம் தமிழ்நாடு விவசாயிகள் திட்டம் மத்திய அரசு திட்டம் ரூ.40 ஆயிரம் பெறுவது எப்படி பிஎம் குசும் திட்டம் என்றால் என்ன பிஎம் மகிழ்ச்சி திட்டம் PM KUSUM Benefits Rs.40 000 Solar Income TANGEDCO KUSUM TEDA Solar Pump Central Government Farmer Schemes Agriculture Solar Subsidy Tamil Nadu
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
चांदी में तूफानी तेजी: 1,60,000 रुपये प्रति किलो के पार, एक्सपर्ट्स का अनुमान 1,75,000 रुपये26 नवंबर को चांदी की कीमतों में जबरदस्त उछाल देखा गया, जो 1,60,000 रुपये प्रति किलो के पार पहुंच गया। विशेषज्ञ अजय केडिया के अनुसार, अगले तीन महीनों में चांदी 1,75,000 रुपये प्रति किलो तक पहुंच सकती है। चांदी की कीमतों में वृद्धि के पांच मुख्य कारण बताए गए हैं, जिनमें अमेरिका द्वारा इसे क्रिटिकल मेटल के रूप में सूचीबद्ध करना, आपूर्ति में कमी, औद्योगिक मांग में वृद्धि और क्लीन एनर्जी में बढ़ती मांग शामिल हैं। विशेषज्ञों का मानना है कि चांदी लंबी अवधि के निवेशकों के लिए फायदेमंद हो सकती है।
Read more »
மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு அநீதியா? 8வது ஊதியக்குழு நிபந்தனையால் மூத்த குடிமக்கள் அச்சம்!th Central Pay Commission: 8வது மத்திய ஊதியக் குழுவின் (CPC) விதிமுறைகள் (ToR) மற்றும் நிதி மசோதா 2025 இல் சேர்க்கப்பட்ட சரிபார்ப்பு பிரிவு குறித்து அச்சம் -முழு விவரம்
Read more »
Central Government Holiday List 2026 : नए साल में सरकारी छुट्टी की लिस्ट देखी क्या? जानें किस-किस दिन बंद रहेंगे गवर्नमेंट ऑफिसेजसाल 2025 खत्म होने जा रहा है। ऐसे में अब सभी की निगाहें नए साल पर टिकी हैं। इसके साथ ही लोग यह जानना चाह रहे हैं कि नए साल में इस बार कितनी छुट्टियां हैं। होली, दिवाली लेकर ईद तक इस बार किस दिन और तारीख को पड़ रहे हैं।
Read more »
அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்! 2026 மத்திய அரசு விடுமுறை பட்டியல் வெளியானதுCentral Government Holidays 2026 : மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ், 2026 ஆம் ஆண்டுக்கான மத்திய அரசு விடுமுறைப் பட்டியல் வெளியாகியுள்ளது.
Read more »
Bihar Government Jobs: बिहार में भर्ती की तैयारी शुरू, सभी महकमों को रिक्ति भेजने का निर्देशबिहार सरकार ने सभी विभागों को 31 दिसंबर तक रिक्तियों की जानकारी सामान्य प्रशासन विभाग को भेजने का निर्देश दिया है। मुख्यमंत्री नीतीश कुमार ने कहा कि उनकी सरकार युवाओं को सरकारी नौकरी और रोजगार देने के लिए प्रतिबद्ध है। अगले पांच वर्षों में एक करोड़ युवाओं को रोजगार देने का लक्ष्य है। नियुक्ति आयोगों को जनवरी 2026 में पूरे साल का कैलेंडर प्रकाशित...
Read more »
பெண்களுக்கு மாநில அரசின் குட் நியூஸ்: மாதம் ரூ.1,500 + ரூ.5,000 ஊக்கத்தொகை!Ladli Behna Yojana: லாட்லி பஹ்னா யோஜனா மூலம் பெண்களுக்கு மாத மாதம் எவ்வளவு பணம் கிடைக்கிறது? பயனாளிகளுக்கு கூடுதல் தொகை கிடைக்கவுள்ளதா? முழு விவரத்தை இந்த பதிவில் காணலாம்.
Read more »
