Akash Deep: இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில், ஆகாஷ் தீப் 66 ரன்கள் அடித்ததன் மூலம் சாதனை படைத்துள்ளார்.
Akash Deep : இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில், ஆகாஷ் தீப் 66 ரன்கள் அடித்ததன் மூலம் சாதனை படைத்துள்ளார்.நவக்கிரக கோவில்களில் சிறப்பு தரிசனம். அதுவும் ஒரே நாளில் - தமிழக அரசின் ஏற்பாடு!இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட அண்டர்சன் - டெண்டுல்கர் தொடரை விளையாடி வருகின்றனர்.
Akash Deep: இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில், ஆகாஷ் தீப் 66 ரன்கள் அடித்ததன் மூலம் சாதனை படைத்துள்ளார்.நவக்கிரக கோவில்களில் சிறப்பு தரிசனம்... அதுவும் ஒரே நாளில் - தமிழக அரசின் ஏற்பாடு!இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட அண்டர்சன் - டெண்டுல்கர் தொடரை விளையாடி வருகின்றனர். இதுவரை இத்தொடரில் 4 டெஸ்ட் போட்டி முடிவடைந்துள்ளது. அதில் இங்கிலாந்து அணி முதல் மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி இரண்டாவது போட்டியிலும் வென்றுள்ளது. மான்செஸ்டரில் நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. இந்த நிலையில், இத்தொடரின் 5வது போட்டி ஜூலை 31ஆம் தேதி ஓவல் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி 224 ரன்கள் மட்டுமே எடுத்தது. மைதானத்தில் பிட்ச் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்ததால், பெரிய ஸ்கோர்களை எட்டமுடியவில்லை. அதிகபட்சமாக கருண் நாயர் 57 ரன்களும் சாய் சுதர்சன் 38 ரன்களும் எடுத்திருந்தனர். இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தது. அந்த அணி 247 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜாக் கிராலி 64, பென் டக்கெட் 43 மற்றும் ஹாரி புரூக் 53 ரன்களை எடுத்திருந்தனர். இதையடுத்து 23 ரன்கள் பின்தங்கிய நிலையில், இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங்கை தொடங்கி விளையாடி வருகிறது. கே.எல். ராகுல் 7 ரன்களிலும் சாய் சுதர்சன் 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் நைட் வாட்ச்மெனாக ஆகாஷ் தீப் களம் இறங்கினார். தொடர்ந்து இன்று தொடங்கிய போட்டியிலும் சிறப்பாக விளையாடி வந்தார். இங்கிலாந்து அணி பந்து வீச்சாளர்கள் ஆகாஷ் தீப்பின் விக்கெட்டை வீழ்த்த முடியாமல் திணறினர்.ஒரு கட்டத்தில் ஜேமி ஓவர்டன் வீசிய பந்தில் எதிர்பாராத விதமாக கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அரைசதத்தை கடந்த அவர், 66 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதில் 12 ஃபோர்கள் அடங்கும். இதன் மூலம் ஆகாஷ் தீப் சர்வதேச கிரிக்கெட்டில் முதல் அரைசதத்தை அடித்தார். இதனை பயிற்சியாளர் கெளதம் கம்பீர் உட்பட அனைவரும் கைதட்டியபடி பாராட்டினர். மேலும், ஹெல்மெட்டை கழற்றி அரைசதம் அடித்ததை கொண்டாடு. நீ அதற்கு தகுதியானவன் என கூறினர். ஆகாஷ் தீப் இப்போட்டியில் 66 ரன்கள் அடித்ததன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 2வது அதிகபட்ச ரன்னை பதிவு செய்த இந்திய நைட் வாட்ச்மேன் என்ற சாதனையை படைத்துள்ளார். முன்னதாக 2011ஆம் ஆண்டில் இதே இங்கிலாந்தில் அமித் மிஸ்ரா 84 ரன்களை அடித்து முதல் இடம் பிடித்தார். அவருக்கு பின்னர் தற்போது ஆகாஷ் தீப் உள்ளார்.மேலும் படிங்க: ஸ்ரேயாஸ் ஐயர் காதலிகள் லிஸ்ட்.. யுஸ்வேந்திர சஹாலின் EX-மனைவியுமா? உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Sivakarthikeyanநீரிழிவு நோயை நிர்மூலமாக்கும் ஆயுர்வேத பொடி... மருத்துவர் பரிந்துரைக்கும் இயற்கை வைத்தியம்கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : யாருக்கு ரூ.1000 கட்டாயம் கிடைக்கும்? விதிமுறை சொல்வது என்ன?Eps Pension
Ind Vs Eng 5Th Test India Vs England Akash Deep New Record Shubman Gill Gautam Gambir Jaiswal Cricket ஆகாஷ் தீப் இந்தியா Vs இங்கிலாந்து 5வது டெஸ்ட் இந்தியா Vs இங்கிலாந்து ஆகாஷ் தீப் புதிய சாதனை ஷுப்மான் கில் கௌதம் கம்பீர் ஜெய்ஸ்வால் கிரிக்கெட்
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
இந்திய அணிக்கு வரலாற்று வெற்றி... ஆகாஷ் தீப் அட்டாக்கில் வீழ்ந்தது இங்கிலாந்து!India vs England: இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 337 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது, இந்திய அணி.
Read more »
Ind vs Eng: ரிஷப் பண்ட்ர் ரன் அவுட்.. நான் தான் காரணம் உண்மையை சொன்ன கே.எல். ராகுல்!இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டில் ரிஷப் பண்ட் 74 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ரன் அவுட் ஆனார்.
Read more »
சௌதியின் தூங்கும் இளவரசர் காலமானார்; 20 ஆண்டுகள் கோமாவும்... ஓர் அப்பாவின் பாச போராட்டமும்!Al-Waleed bin Khaled: கடந்த 20 ஆண்டுகளாக கோமாவில் இருந்த சௌதி அரேபியாவின் இளவரசர் அல்-வலீத் பின் காலெத் நேற்று (ஜூலை 19) காலமானார்.
Read more »
இந்திய அணிக்குள் வரும் வெறித்தனமான சிஎஸ்கே பௌலர்... அர்ஷ்தீப் சிங் அவுட்!இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அர்ஷ்தீப் சிங்கிற்கு காயம் ஏற்பட்டுள்ள நிலையில், அவருக்கு பதில் சிஎஸ்கே வேகப்பந்துவீச்சாளருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக தகவல்
Read more »
பாண்டிச்சேரி பிரீமியர் லீக்: பிளே ஆஃப் சுற்றை தக்கவைத்த ஊசுடு.. வெளியேறிய காரைக்கால் அணி!சிறப்பான பந்துவீச்சால் காரைக்கால் நைட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஊசுடு அக்கார்ட் வாரியர்ஸ் அணி வெற்றி பெற்றது.
Read more »
