தமிழ்நாட்டில் மீண்டும் ஒரு சர்வதேச விமான நிலையம்... அது ஏன் ஒசூரில் வருகிறது தெரியுமா?

Hosur International Airport News

தமிழ்நாட்டில் மீண்டும் ஒரு சர்வதேச விமான நிலையம்... அது ஏன் ஒசூரில் வருகிறது தெரியுமா?
Hosur International Airport AnnouncementHosur International Airport FacilityTN Assembly Meeting 2024
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 198 sec. here
  • 23 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 145%
  • Publisher: 63%

Hosur International Airport Latest Update: ஓசூரில் 3 கோடி பயணிகளைக் கையாளக்கூடிய வகையில், 2 ஆயிரம் ஏக்கரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என அறிவித்திருந்த நிலையில், அதன் பயன்களையும் அந்த உரையில் தெரிவித்துள்ளார்.

Hosur International Airport Latest Update: ஓசூரில் 3 கோடி பயணிகளைக் கையாளக்கூடிய வகையில், 2 ஆயிரம் ஏக்கரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என அறிவித்திருந்த நிலையில், அதன் பயன்களையும் அந்த உரையில் தெரிவித்துள்ளார்.

ஒசூர் நகரம் மின் வாகனங்கள் உற்பத்தித் துறையில் டாப்பில் உள்ளது.ஜூன் 29 புதன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அமோகமான ஏற்றம்... யாருக்கு ஏமாற்றம்? முழு ராசிபலன் இதோDiabetesதமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று விதி 110ன்கீழ் வெளியிட்ட அறிவிப்பில்,"தமிழ்நாட்டின் உட்கட்டமைப்புக்கும், தொழில் வளர்ச்சிக்கும் அடித்தளம் அமைக்கப்போகும் மாபெரும் அறிவிப்பு ஒன்றையும், தமிழ்நாட்டிலுள்ள இளைஞர்களின் அறிவு வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கப்போகும் அறிவுலகம் வரவேற்கும் முக்கியமான அறிவிப்பு ஒன்றையும் இந்த சட்டப்பேரவையில் அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என தெரிவித்தார்.ஒசூரில் விமான நிலையம் அமைப்பது குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அதில்,"திராவிட மாடல் ஆட்சி அமைந்த பிறகு, தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் வளர்ந்து வருகிறது. அதில் மிக முக்கியமானது பெருந்தொழில்கள் - வளர்ச்சிமிகு தமிழ்நாடாகவும், அமைதிமிகு தமிழ்நாடாகவும் இருப்பதால், தமிழ்நாட்டை நோக்கிப் பல்வேறு நிறுவனங்கள் உலகம் முழுவதும் இருந்து தொழில் தொடங்குவதற்கு வந்து கொண்டேயிருக்கிறார்கள். இந்தத் தொழில் நிறுவனங்கள் மூலமாகத் தமிழ்நாட்டின் தொழில் துறை வளர்ச்சி அடைகிறது என்பது மட்டுமல்ல; தமிழ்நாட்டின் இளைய சக்தியான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கிறது.2022 ஆம் ஆண்டிற்கான ஏற்றுமதி தயார்நிலை குறியீட்டில் இந்தியாவிலேயே தமிழ்நாடு 'நம்பர்-1' மாநிலமாக முன்னேற்றம் கண்டுள்ளது. மோட்டார் வாகனங்கள், உதிரி பாகங்கள், தோல் பொருட்கள், மின்னணுப் பொருட்கள் ஆகியவற்றின் ஏற்றுமதியில் தமிழ்நாடு இந்தியாவின் முதன்மை மாநிலமாக விளங்குகிறது. புத்தொழில் வளர்ச்சிக்கான மாநிலங்களின் தரவரிசையில், 2020ஆம் ஆண்டில் கடைசி நிலையில் இருந்த தமிழ்நாடு, தற்போது சிறந்த செயற்பாட்டாளர் அந்தஸ்தைப் பெற்று முதலிடம் பெற்றுள்ளது.இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வரும் தமிழ்நாட்டினை, 2030ஆம் ஆண்டிற்குள் 'ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக' உயர்த்திட வேண்டும் என்ற இலக்கினை விரைவில் அடைவதற்காக, தமிழ்நாடு அரசின் தொழில் துறை பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. உலக முதலீட்டாளர்களை ஈர்க்கும் மாநிலமாக தமிழ்நாடு உயர்ந்து வருவதை இதன் மூலம் அறியலாம். அனைத்து மாவட்டங்களிலும் தொழில்களைப் பரவலாக உருவாக்கி வருகிறோம்.இதில் மின்னணு மற்றும் மின் வாகனங்கள் உற்பத்தித் துறையில் ஓசூர் கடந்த சில ஆண்டுகளில் முதலீடுகளை அதிகளவில் ஈர்த்து வருகிறது. இப்படிப்பட்ட சிறப்புகளைக் கொண்டு வேகமாக வளர்ந்து வரும் ஓசூர் நகரத்தினை, தமிழ்நாட்டின் முக்கியமான பொருளாதார வளர்ச்சி மையமாக உருவாக்குவதற்காக, அங்கு நவீன உட்கட்டமைப்புகளை அமைக்கும் நோக்கில், பல்வேறு தொலைநோக்குத் திட்டங்களை தமிழ்நாடு அரசு தற்போது செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், ஓசூர் நகரத்திற்கான ஒரு புதிய பெருந்திட்டம் தயாரிக்கப்பட்டு, அது முடிவடையும் தருவாயில் உள்ளது. ஒசூர் மட்டுமல்லாது, கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி பகுதியின் ஒட்டுமொத்த சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் வகையில் ஒசூரில் ஒரு விமான நிலையம் அமைப்பது அவசியம் என இந்த அரசு கருதுகிறது. ஒசூரில் இரண்டாயிரம் ஏக்கர் நிலப்பரப்பில், ஆண்டுக்கு 3 கோடி பயணிகளைக் கையாளக்கூடிய வகையில், ஒரு பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என்பதனை இந்த மாமன்றத்தில் நான் அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்றார்.தமிழ்நாட்டில் இதுவரை மொத்தம் நான்கு பன்னாட்டு விமான நிலையங்கள் உள்ளன. சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள விமான நிலையங்கள் பன்னாட்டு அங்கீகாரத்தை பெற்றது. சென்னை அருகே பரந்தூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு முன்னர் அறிவித்திருந்தது. தற்போது ஒசூரில் விமான நிலையம் அமைக்கப்படுவது பெரும் அறிவிப்பாகும். மேலும் திருச்சியில் கலைஞர் பெயரில் மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் தொடங்கப்படும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். மேலும் படிக்க | 'ஸ்டாலின், உதயநிதி வாழ்க...' பதவியேற்பில் திமுக எம்பிகள் கோஷம் - முழக்கமிடாத இந்த 3 பேர்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Om Birlaபட்டப்பகலில் அரசு அலுவலகத்தில் மது அருந்தும் அதிகாரிகள்: வைரலாகும் அதிர்ச்சி வீடியோHair fallஇளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த ராணுவ வீரர்! காவலர் கண் எதிரே தாக்குதல்..

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Hosur International Airport Announcement Hosur International Airport Facility TN Assembly Meeting 2024 MK Stalin In Assembly Why International Airport In Hosur Tamilnadu News Tamilnadu Today News Tamilnadu Today Latest News Tamilnadu Assembly News Hosur International Airport Latest Update MK Stalin ஒசூர் ஒசூர் சர்வதேச விமான நிலையம் அறிவிப்பு புதிய சர்வதேச விமான நிலையம் ஒசூர் பன்னாட்டு விமான நிலையம் தமிழ்நாடு சட்டப்பேரவை செய்திகள் ஏன் சர்வதேச விமான நிலையம் ஒசூரில் வருகிறது ஓசூர்

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

வெற்றிகரமான தோல்வி... சக்ஸஸ் ஆன தமிழக பாஜகவின் வியூகம் - அண்ணாமலையின் திட்டம் இதுதான்!வெற்றிகரமான தோல்வி... சக்ஸஸ் ஆன தமிழக பாஜகவின் வியூகம் - அண்ணாமலையின் திட்டம் இதுதான்!BJP NDA Vote Percentage In Tamil Nadu: பாஜக தமிழ்நாட்டில் ஒரு இடத்தை கூட கைப்பற்றாவிட்டாலும், அது அவர்களுக்கு வெற்றிகரமான தோல்வியாகவே அக்கட்சியினரால் பார்க்கப்படுகிறது.
Read more »

Aishwarya Arjun : வருங்கால மருமகளுக்கு ஒரே ஒரு கண்டீஷன் போட்ட தம்பி ராமையா! என்ன தெரியுமா?Aishwarya Arjun : வருங்கால மருமகளுக்கு ஒரே ஒரு கண்டீஷன் போட்ட தம்பி ராமையா! என்ன தெரியுமா?Aishwarya Arjun வருங்கால மருமகளுக்கு ஒரே ஒரு கண்டீஷன் போட்ட தம்பி ராமையா என்ன தெரியுமா
Read more »

மீண்டும் இணைந்த எதிர்நீச்சல் டீம்.. சர்ப்ரைஸ் கொடுத்த இயக்குனர்மீண்டும் இணைந்த எதிர்நீச்சல் டீம்.. சர்ப்ரைஸ் கொடுத்த இயக்குனர்Ethirneechal Serial Latest Update: மிகவும் பிரபலமான எதிர்நீச்சல் சீரியல் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது மீண்டும் எதிர்நீச்சல் சீரியல் நட்சத்திரங்கள் இணைந்துள்ள வீடியோக்கள் வைரலாகி வருகிறது.
Read more »

போஸ்ட் ஆஃபீஸில் முடப்பட்ட ஆர்டி கணக்கை மீண்டும் எவ்வாறு ஆக்டிவேட் செய்வது? இதோ வழிமுறைபோஸ்ட் ஆஃபீஸில் முடப்பட்ட ஆர்டி கணக்கை மீண்டும் எவ்வாறு ஆக்டிவேட் செய்வது? இதோ வழிமுறைபோஸ்ட் ஆஃபீஸில் ஆர்டி அக்கவுண்ட் இருந்து அது சில காரணங்களால் மூடப்பட்டிருந்தால், அந்த கணக்கை மீண்டும் எப்படி செயல்படுத்துவது என்பதை பார்க்கலாம்.
Read more »

பீர் மட்டும் குடிப்போர் கவனத்திற்கு! இதையும் தெரிஞ்சுக்கோங்க!பீர் மட்டும் குடிப்போர் கவனத்திற்கு! இதையும் தெரிஞ்சுக்கோங்க!பல ஆண்டுகளாக பீர் ஒரு பிரபலமான மதுபானமாக இருந்து வருகிறது. பீர் குடிப்பதால் கெடுதல்கள் தான் அதிகம் உள்ளது தவிர, நன்மைகள் மிகவும் கம்மியாகத்தான் உள்ளது.
Read more »

மத்திய அரசு ஊழியர்கள்ளுக்கு டபுள் ஜாக்பாட்: அகவிலைப்படியுடன் இதுவும் உயரக்கூடும்!!மத்திய அரசு ஊழியர்கள்ளுக்கு டபுள் ஜாக்பாட்: அகவிலைப்படியுடன் இதுவும் உயரக்கூடும்!!7th Pay Commission: அகவிலைப்படி மட்டுமல்லாமல் ஃபிட்மெண்ட் ஃபாக்டரிலும் அரசாங்கம் ஒரு முக்கிய முடிவை எடுக்கும் என கூறப்படுகின்றது. இது நடந்தால், அது ஊழியர்களின் ஊதியத்தில் ஒரு பூஸ்டர் டோஸ் போல செயல்படும்.
Read more »



Render Time: 2026-04-02 21:04:52