Ditwah Cyclone Helpline Number Announced: வங்கக் கடலில் உருவாகி உள்ள டித்வா புயல் வட தமிழகத்தை நெருங்கி வரும் நிலையில், இரண்டு மாவட்டங்களுக்கு உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
Ditwah Cyclone Helpline Number Announced: வங்கக் கடலில் உருவாகி உள்ள டித்வா புயல் வட தமிழகத்தை நெருங்கி வரும் நிலையில், இரண்டு மாவட்டங்களுக்கு உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.Kalaignar Magalir Urimai ThogaiRasi PalanRasipalan வங்கக் கடலில் டித்வா புயல் உருவாகி தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.
சுமார் 540 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. அதாவது Ditwah புயல் திருகோணமலை இலங்கைக்கு தென்மேற்கே சுமார் 50 கிமீ, மட்டக்களப்பிலிருந்து 90 கிமீ வடமேற்கே, ஹம்பாந்தோட்டைக்கு வடக்கே 230 கிமீ, புதுச்சேரிக்கு தென்கிழக்கே 440 கிமீ மற்றும் சென்னைக்கு தெற்கே 540 கிமீ தொலைவில் மையம் கொண்டிருக்கிறது.இந்த டித்வா புயல் இலங்கை கடற்கரை மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்காள விரிகுடா வழியாக வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து நாளை மறுநாள் அதிகாலையில் வட மேற்கு நோக்கி நகர்ந்து வட தமிழகம், புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரைகளுக்கு அருகில் கரையை கடக்கும என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழைக்கான வாய்ப்பிருக்கிறது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் மழை சேதம் தொடர்பாக புகார் அளிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறது.மயிலாடுதுறை மாவட்டத்தில் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்ய உள்ளதால், அங்குள்ள நீர்நிலைகளில் பொதுமக்கள் குறிப்பதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் மழை சேதம் தொடர்பான புகார்களுக்கு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை எண்: 1077 மற்றும் 04364-222588 என்ற எண்ணிற்கு தொடர்புகொள்ளலாம் என அம்மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் அறிவுறுத்தி உள்ளார். மேலும், மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர் யாரும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்படுகின்றனர்.அதேபோல் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியரும் உதவி எண்களை அறிவித்திருக்கிறார். வடகிழக்கு பருவமழையால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இன்றும் நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அவசர உதவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள அவசரக்கால கட்டுப்பாட்டு மைய தொலைபேசி எண். 04365-1077, கட்டணமில்லா தொலைபேசி எண். 1800-233-4233 மற்றும் வாட்ஸ் ஆப் எண். 8110005558 ஆகியவற்றுக்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் அறிவுறுத்தி உள்ளார்.டித்வா புயல் கரையை கடக்கும் வரை கடலோர மாவட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்க அறிவுறுத்தப்படுகின்றனர். மேலும், குறிப்பாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் தங்களது படங்குகளை பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைத்திடுமாறும், இயந்திரம் உள்ளிட்ட இதர மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பான இடத்தில் வைத்திருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.மேலும் படிக்க: நெருங்கும் டித்வா புயல்: ரெட் அலர்ட் எதிரொலி.. 3 நாட்கள் பள்ளி விடுமுறை? தமிழக அரசு ஆலோசனை உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!மூத்த குடிமக்களுக்கு 60 வயதில் தானாக தொடங்கும் ஓய்வூதியம்: படிவம், விண்ணப்பம் எதுவும் வேண்டாம்இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் ரூ.5000 நோட்டு? உண்மை விவரம்Central government : தமிழக விவசாயிகளே ரூ.40,000 வேண்டுமா? மத்திய அரசின் குட் நியூஸ்அமெரிக்க இந்தியர்களுக்கு நிம்மதி! எச்-1பி பணியாளர்களை நீக்கத் திட்டம் இல்லை -வெள்ளை மாளிகைChennai Hyderabad Bullet Trainகிரெடிட் ஸ்கோர் தொடர்பான முக்கிய அப்டேட்! கடன் வாங்குவது இனி ஈஸி தான்!வட கிழக்கு பருவமழை : அரசு அதிகாரிகள், அலுவலர்களுக்கு முதலமைச்சர் 3 முக்கிய உத்தரவு
Cyclone Ditwah Red Alert Districts Mayiladuthurai Nagapattinam Cyclone Ditwah Latest Update Cyclone Ditwah Red Alert Tamil Nadu Red Alert Mayiladuthurai Cyclone Red Alert Nagapattinam Cyclone Tamil Nadu Cyclone Warning Update Mayiladuthurai Cyclone Latest News Ditwah Cyclone Latest News Tamil Nadu Disaster Helpline Cyclone Mayiladuthurai Helpline Number Nagapattinam Helpline Number Cyclone Ditwah Tamil Nadu Impact Cyclone Ditwah News Today டித்வா புயல் உதவி எண்கள் ரெட் அலர்ட் மாவட்டங்கள் டித்வா புயல் லேட்டஸ்ட் நியூஸ் டித்வா புயல் லேட்டஸ்ட் அப்டேட் ரெட் அலர்ட் மயிலாடுதுறை புயல் ரெட் அலர்ட் நாகப்பட்டினம் சூறாவளி தமிழ்நாடு புயல் எச்சரிக்கை அப்டேட் மயிலாடுதுறை புயல் லேட்டஸ்ட் நியூஸ் டித்வா புயல் லேட்டஸ்ட் நியூஸ் தமிழ்நாடு பேரிடர் உதவி எண்கள் மயிலாடுதுறை ஹெல்ப்லைன் நம்பர் நாகப்பட்டினம் ஹெல்ப்லைன் எண் டித்வா புயல் தமிழ்நாடு பாதிப்பு டித்வா புயல் இன்றைய செய்திகள்
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
சென்னையை நோக்கி டித்வா புயல்? வெளுக்கப்போகும் கனமழை.. 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!Cyclone Ditwah Latest Update: நாளை (நவம்பர் 27) நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
Read more »
Ditwah Cyclone: ഡിറ്റ് വാ ചുഴലിക്കാറ്റ് രൂപപ്പെട്ടു; കേരളത്തിൽ ഒറ്റപ്പെട്ട ശക്തമായ മഴയ്ക്ക് സാധ്യതകേരള - ലക്ഷദ്വീപ് തീരങ്ങളിൽ മത്സ്യബന്ധനത്തിന് പോകാൻ പാടില്ലെന്ന് നിർദ്ദേശം.
Read more »
समुद्रातून येतंय विध्वंसकारी संकट; IMD कडून ‘या’ भागांसाठी साधगिरीचा इशारा, सतर्क राहा अन्यथा...IMD alert cyclone ditwah : केंद्रीय हवामानशास्त्र विभागाच्या माहितीनुसार एक नवं चक्रीवादळ भारताच्या दक्षिण किनारपट्टीवर तयार होत असून महाराष्ट्रावर त्याचा कसा परिणाम होणार?
Read more »
Cyclone Ditwah: सेन्यार के बाद एक और तूफान की दस्तक, इन राज्यों में अलर्ट जारीCyclone Ditwah: साइक्लोन सेन्यार के कमजोर पड़ने के बाद अब एक और तूफान बनने की आशंका जताई जा रही है. मौसम विभाग (IMD) ने अलर्ट जारी करते हुए लोगों को समुद्र से दूर रहने की सलाह दी है. साथ ही, कई इलाकों में भारी बारिश की संभावना जताई है.
Read more »
Cyclone Ditwah Update: সেনিয়ারের পর এবার ধেয়ে আসছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় দিতোয়া! ফুঁসছে বঙ্গোপসাগর... আর ১২ ঘণ্টায় সব ওলটপালট?Cyclone Ditwah brewing in Bay of Bengal Tamil Nadu Andhra on alert
Read more »
Ditwah புயல் எங்கே? எப்போது கரையை கடக்கும்.. 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்Ditwah Cyclone Update: ’Ditwah’ புயல் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடற்கரைகளை நோக்கி நகரத் தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Read more »
